Tuesday, January 27, 2009

என்ன சொல்வது..?


மண்வாசனை தான்
அழகா என்ன ?
பின் உன் வாசனையை
என்ன சொல்வது..?
வானவில் தான்
அழகா என்ன..?
பின் உன் புருவத்தை
என்ன சொல்வது..?
கார்மேகம் தான்
அழகா என்ன ?
பின் உன் கருவிழியை
என்ன சொல்வது..?
மழைத்துளிதான்
அழகா என்ன..?
பின் உன் கண்ணீர்துளிகளை
என்ன சொல்வது..?

No comments: