Thursday, January 29, 2009

கவிதைக்கும்...


கவிதைக்கே
கவிதை பிடிக்காது

என்பதை

உன்னிடம் தான்

அறிந்துகொண்டேன்...

நட்பு


உன் தனிமையிலும்
நினைவுகளாய்
இருப்பவர்கள் தான்
நண்பர்கள்...

ம்ம்...


நிலவையே
வெட்கப்பட
வைத்தவள்

நீ...

பொய்யும் நீயும்..


கவிதைக்கு
அழகு
பொய்..
எனக்கு
அழகு
நீ...

நீ...


ஒரு வரியில்
நட்பை சொல்லவா..??
.
.
.
நீ...

அன்பு...


நீ அழகாய்தான்
இருக்கிறாய்
ஆனால் உன்னைவிட‌
உன் அன்பு மிக
அழகாய் தெரிகிறது...

Tuesday, January 27, 2009

என்ன சொல்வது..?


மண்வாசனை தான்
அழகா என்ன ?
பின் உன் வாசனையை
என்ன சொல்வது..?
வானவில் தான்
அழகா என்ன..?
பின் உன் புருவத்தை
என்ன சொல்வது..?
கார்மேகம் தான்
அழகா என்ன ?
பின் உன் கருவிழியை
என்ன சொல்வது..?
மழைத்துளிதான்
அழகா என்ன..?
பின் உன் கண்ணீர்துளிகளை
என்ன சொல்வது..?

தொடுதல்..


நீ தொட்டது
என் உடலைமட்டும் அல்ல‌
என் உள்ளத்தையும்
சேர்த்துதான்...

நிழலாய்...


நிலவில்லாத வானமும்
இதழில்லாத ரோஜாவும்
மணல் இல்லாத பலைவனமும்
ரசிக்கப்படும்
நீ என் அருகில்
இருக்கும்மட்டில்...

உணர்வு..


நீ என் தோள்மீது
சாய்ந்த போதுதான்

உணர்ந்தேன்...

என் தாயும்
நீயென்று...

வெட்கம்...

நட்பையும்
காதலையும்
வேறுபடுத்துவது
ஒன்றுதான்...
வெட்கம்...